Anbe Anbe Nee En Pillai - Uyirodu Uyiraga







பெ: அன்பே அன்பே நீ என் பிள்ளை
 தேகம் மட்டும் காதல் இல்லை
 பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
 உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்
 பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
 உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

 
 பெ: அன்பே அன்பே நீ என் பிள்ளை
 தேகம் மட்டும் காதல் இல்லை

 
 பெ: கண்ணா என் கூந்தலில் சூடும் 

 பொன் பூக்களும் உன்னை உன்னை அழைக்க
 
ஆ: கண்ணே உன் கைவளை மீட்டும் 
 சங்கீதங்கள் என்னை என்னை உரைக்க
 
பெ: கண்களைத் திறந்து கொண்டு 
  நான் கனவுகள் காணுகிறேன்
 
ஆ: கண்களை மூடிக்கொண்டு 
 நான் காட்சிகள் தேடுகிறேன்
 
பெ: உன் பொன் விரல் தொடுகையிலே 
 நான் பூவாய் மாறுகிறேன்
 
 ஆ: பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
 உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்,
 

பெ: அன்பே அன்பே நீ என் பிள்ளை
 தேகம் மட்டும் காதல் இல்லை,

 
 

 ஆ: யாரும் சொல்லாமலும் ஓசை 
 இல்லாமலும் தீயும் பஞ்சும் நெருங்க
 
பெ: யாரைப் பெண் என்பது யாரை 
 ஆண் என்பது ஒன்றில் ஒன்று அடங்க
 
ஆ: உச்சியில் தேன் விழுந்து 
 என் உயிருக்குள் இனிக்குதடி
 
பெ: மண்ணகம் மறந்து விட்டேன் 
 எனை  மாற்றுங்கள் பழையபடி
 
ஆ: உன் வாசத்தை சுவாசிக்கிறேன் 
 என் ஆயுள் நீளும்படி,
 
 பெ: பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
 உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்,
அன்பே அன்பே நீ என் பிள்ளை
 தேகம் மட்டும் காதல் இல்லை
 
ஆ: பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
 உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்
 
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
 உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்,