Oh Priya Priya - Idhayaththai Thirudathey




ஆ: ஆஆ.ஆஆ..ஆஆ..................................ம்ம்ம்மம்மம்ம்ம்ம்

ஆ: ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஏழை காதல் வாழுமோ இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓரோரம்
கானல் நீரால் தாகம் தீராது


பெ: ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவது வானம் பூமி ஆவதோ
காலம் சிறிது காதல் நமது
தேவன் நீதான் போனால் விடாது,

ஆ: தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி....


 
பெ: அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணை இட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ,

 
ஆ: ராஜ மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் எழை இங்கு ஓர் பாவி அல்லவோ,

 
 பெ: எதனாலும் ஒரு நாளும் மறையாது ப்ரேமையும்
 
ஆ: எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
 
 பெ: கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா வா...

ஆ: ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
 
பெ: ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

 
பெ: காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராச லீலைகள்
பருவ மோகம் தந்தது பாவம் அல்லவே,
 
ஆ: ஷாஜஹானின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி
பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது,

 
பெ: இறந்தாலே இறவாது விளைகின்ற ப்ரேமையே
 
ஆ: அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே
 
பெ: விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே
இளம் கன்னி உன்னுடன் கூட வா வா.....


ஆ: ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
 
பெ: ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

ஆ: ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி
 
பெ: நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்கலம்
ப்ரேமை நாடகம் பெண்மை ஆடிடும்............